ads

லெனின் பெரியார் வரிசையில் இப்போது அம்பேத்கரும் சேர்ந்தார்

அம்பேதகர் சிலை சிதைப்பு. Dr.B.R.Ambethkar representation image

அம்பேதகர் சிலை சிதைப்பு. Dr.B.R.Ambethkar representation image

லெனின் பெரியார் வரிசையில் இப்போது அம்பேத்கரும் சேர்ந்தார்.

உத்தரபிரதேச மாகாணமான மீரட்டில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. லெனின், பெரியார், ஷியாம் பிரசாத் முகர்ஜி சிலைகளை அடுத்து இப்போது அம்பேத்கரின் சிலையும் உடைக்கப்பட்டது.

நேற்று இரவே மீரட்டில் அம்பேத்கரின்  சிலை முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் புதிய சிலை அமைத்துத் தருமாறு போராட்டத்தில் அமர்ந்தனர் அதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க அப்பகுதி முழுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை தொடரப்பட்ட போராட்டம்  தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிகாரிகள் நேரில் ஆஜராகி அப்பகுதி மக்களிடம் பேசியதாலும் புதிய சில அமைத்துத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததாலும் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அடங்கு வந்த அதிகாரிகள் அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

லெனின் பெரியார் வரிசையில் இப்போது அம்பேத்கரும் சேர்ந்தார்