ads

நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் ஜீவா

தளபதி 62 படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவாவும் நடிக்க உள்ளார்.

தளபதி 62 படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவாவும் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி மெர்சல் நடிகரான விஜய், மெர்சல் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் நல்ல அரசியல் களமுடன் வித்தியாசமான திரைக்கதையை கொண்டதாக உருவாகி வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்பி சவுதியின் சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள 100வது படமாகும். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜீவா, விஜய்க்கு 'நண்பன்' படத்தின் மூலம் நல்ல நண்பனானார். இந்த படத்திற்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ஜில்லா படத்தில் ஒரு பாட்டுக்கு விஜயுடன் இணைந்து ஜீவா நடனம் ஆடினார்.

இந்த படங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடிப்பில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் தற்போது கொரில்லா படம் உருவாகி வருகிறது. இந்த படம் சிம்பன்சி குரங்கை வைத்து உருவாகவுள்ள இந்தியாவின் முதல் படமாகும். இதற்காக அந்த குரங்கிற்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்திற்கு பிறகு ஜீவா விஜய் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் ஜீவா