ads

நடிகர் கதிரின் பரியேறும் பெருமாள் படத்தின் கதை

காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.

காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.

இயக்குனர் பா இரஞ்சித்தின் சொந்த நிறுவனமான நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரித்து வரும் படம் “பரியேறும் பெருமாள். இந்த படத்தை இயக்குனர் ராமின் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் “மறக்கவே நினைக்கிறேன்” என்ற தொடருக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படம் முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடம் இருக்கும் பிரிவினையையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் பற்றி பேசும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும். பரியேறும் பெருமாளாக நடிகர் கதிர் சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பாடல் வரிகளை விவேக் மற்றும் மாரி செல்வராஜ் எழுதியிருக்கிறார்கள். ஆர்கே செல்வா எடிட்டராகவும் ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். மும்முரமாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதன் பிறகு படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக கையாண்டு வருகிறது.

நடிகர் கதிரின் பரியேறும் பெருமாள் படத்தின் கதை