ads

11 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் இணைந்த சத்யராஜ்

கண்ணாமூச்சி ஏனடா படத்திற்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

கண்ணாமூச்சி ஏனடா படத்திற்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

தமிழ்  தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சத்யராஜ் தற்போது வரை ஏராளாமான படங்களில் நடித்துள்ளார். மெர்சல், பாகுபலி 2 போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியானது. இதனை தொடர்ந்து பார்ட்டி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் மலையாளப் படமான ‘காளியன்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குஞ்சிர கோட்டு காளி என்ற படை வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தில் காளி கதாபாத்திரத்தில் ப்ரீத்வி ராஜ் நடிக்க உள்ளார்.

இதில் 'ரவிக்குட்டிபிள்ளை' என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். ‘பாகுபலி’ படத்தில் சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதன் பிறகு வரலாற்று சார்ந்த படமான 'காளியன்' படத்தில் இந்த பாத்திரத்துக்கு சத்யராஜ்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் மகேஷ் முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா மூச்சு ஏனடா’ படத்தில் பிரித்விராஜும், சத்யராஜும் இணைந்து நடித்தனர். இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

சத்யராஜ், பிரித்விராஜின் வரலாற்று படமான காளியன் படத்தில் நடிக்க உள்ளார்.சத்யராஜ், பிரித்விராஜின் வரலாற்று படமான காளியன் படத்தில் நடிக்க உள்ளார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் இணைந்த சத்யராஜ்