ads

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி

தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை போன்ற படங்களுக்கு பிறகு முன்னணி இயக்குனரான மணி ரத்னம் அவர்களின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'செக்க சிவந்த வானம்'. விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தொழிற்சாலை பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடிகர் சிம்பு, அரவிந் சாமி, அதிதி ராவ், அருண் விஜய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான புகைப்படத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. சாதாரண எளிமையான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக தெரிகிறது.

இவரின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்டால் மட்டுமே தெரியவரும். அந்த அளவிற்கு இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ரகசியமாக வைத்து வருகின்றனர். தயாரிப்பாளர் பிரச்சனையில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி