ads

சூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி என்ஜிகே, மாரி 2 போன்ற படங்களை தொடர்ந்து தற்போது புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி என்ஜிகே, மாரி 2 போன்ற படங்களை தொடர்ந்து தற்போது புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் 'ப்ரேமம்' மலர் டீச்சர் கதாபாத்திரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைத்துறையினரிடையே மிக பிரபலமானதை தொடர்ந்து பல மொழிகளில் நடிக்க பிசியாக உள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்திருந்தார். தமிழில் நடிக்க நீண்ட நாட்களாக ஒரு நல்ல படத்திற்கு காத்திருந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 'என்ஜிகே' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இவர் சூர்யாவின் தீவிர ரசிகை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் தனுஷின் 'மாரி 2' படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் 'சீம ராஜா' படத்திலும், இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்க உள்ள அறிவியல் சார்ந்த படத்திலும் பிஸியாக உள்ளார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

சூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி