ads

விஜய் சேதுபதி உதயநிதியை தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமி

இயக்குனர் சமுத்திரக்கனி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கவுள்ள புதுப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கவுள்ள புதுப்படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி நடிப்பில் இறுதியாக நிமிர், ஏமாளி, மதுர வீரன் போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் காலா, கொளஞ்சி, ஆண் தேவதை, பேரன்பு, வட சென்னை, கிட்னா, சங்க தலைவன் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நடிகர் பார்த்திபன் இயக்கவுள்ள 'உள்ளே வெளியே 2' மற்றும் விவசாயம் சார்ந்ததாக உருவாகி வரும் வெள்ளை யானை படத்திலும் நடித்து வருகிறார்.

எந்த ஒரு இயக்குனரும் சமூக அக்கறை கொண்ட படம் என்றாலே முதலில் நடிகர் சமுத்திரக்கனியை தான் நாடுவர். ஏனென்றால் இவருடைய நடிப்பும், இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களும் மக்களுடைய நல்ல கருத்துக்களை பதிவு செய்யும். இவருடைய வசனத்திற்கும், நடிப்பிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் சீனு ராமாசாமியுடன் இணைந்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை இயக்குனர் சமுத்திரக்கனி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி, தர்மதுரை படத்தின் வெற்றியை அடுத்து 'கண்ணே கலைமானே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினை  பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படமும் சமூக கருத்துக்களை பதிவு செய்யும் படமாக உருவாக உள்ளது.

விஜய் சேதுபதி உதயநிதியை தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமி