ads

கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்

கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்துள்ளார்.

கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'கோலமாவு கோகிலா'. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். போதை மருந்து விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தற்போது பாடலாசிரியரான சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் 'கல்யாண வயசு' என்று தொடங்கும் பாடலை கடந்த 16-ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.

காமெடி நடிகர் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெளியான 5 நாட்களில் 6.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் ஒரு வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்த பாடல் ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று அனிருத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதற்கு அனிருத் அளித்த பதிலில் 'பல விழிப்புணர்வுகளுக்காக, உலகம் முழுவதுமுள்ள இசை தயாரிப்பாளரிடம் உழைத்துள்ளேன். இந்த பாடலின் பீட் உரிமையை மந்த்ரா நிறுவனம் வைத்துள்ளது' என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த பதிலும் நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இவரின் இந்த பதிலை வைத்து அனிருத் இசையமைப்பாளர் அல்ல, இசையை வாங்கி வெளியிடுபவர் என்று கிண்டலிடித்து வருகின்றனர்.

கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்