ads

பலூன் லிசா படங்களை தொடர்ந்து அஞ்சலியின் அடுத்த த்ரில்லர் படம்

நடிகை அஞ்சலி நடிப்பில் பலூன் படத்திற்கு பிறகு லிசா என்ற த்ரில்லர் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த த்ரில்லர் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை அஞ்சலி நடிப்பில் பலூன் படத்திற்கு பிறகு லிசா என்ற த்ரில்லர் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த த்ரில்லர் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை அஞ்சலி நடிப்பில் இறுதியாக 'காளி' படம் வெளியாகியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் பேரன்பு, நாடோடிகள் 2, கீதாஞ்சலி 2, லிசா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து புதுப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, தொடர்ந்து த்ரில்லர் படங்களில் நடிக்க ஆவலுடன் உள்ளதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் இவருக்கு தற்போது த்ரில்லர் படங்களின் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இவருடைய நடிப்பில் 'பலூன்' படத்திற்கு பிறகு அடுத்த த்ரில்லர் படமாக 'லிசா' என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படம் இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் தயாரிப்பாளர் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியாவின் முதல் ஸ்டிரியோஸ்கோபிக் படமாம்.

இந்நிலையில் அடுத்த த்ரில்லர் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் பிரவீன் பிக்காட் என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் அஜய் பணிக்கர் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு 'ஓ' என்ற ஒற்றை பெயரை தலைப்பாக வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக்கை தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிசாசு, பசங்க 2, துப்பறிவாளன், சவரக்கத்தி போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைக்க உள்ளார்.

அஞ்சலியின் அடுத்த த்ரில்லர் படத்திற்கு ஓ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.அஞ்சலியின் அடுத்த த்ரில்லர் படத்திற்கு ஓ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பலூன் லிசா படங்களை தொடர்ந்து அஞ்சலியின் அடுத்த த்ரில்லர் படம்