ads

இறைவி படத்திற்கு பிறகு சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி

நடிகை அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மீண்டும் இறைவி படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர்.

நடிகை அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மீண்டும் இறைவி படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர்.

பிரபல முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, ஜூங்கா, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. இவருடைய நடிப்பில் கடந்த 2016-இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சேதுபதி'. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் அருண் குமாருடன் 'பண்ணையாரும் பத்மினியும்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்தார். இந்த படம் அனிருத் இசையமைப்பில் காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016இல் மட்டும் 6 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் 'இறைவி' படமும் ஒன்று. சேதுபதி படத்திற்கு பிறகு வெளியான இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி, அஞ்சலி ஆகியோர் முதன் முறையாக ஜோடி சேர்ந்தனர். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவான இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி ஆகியோரின் மாறுபட்ட நடிப்பில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி ஆகியோர் இரண்டாவது முறையாக இயக்குனர் அருண்குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி, இயக்குனர் அருண் குமார், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் அருண் குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் ராஜாராஜாவின் கே ப்ரொடக்சன் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இசையமைப்பாளர் ராஜா தயாரித்து இசைஅமைக்கவும் உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் லிங்கா நடிக்க உள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இறைவி படத்திற்கு பிறகு சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி