ads

மரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா

மரகத நாணயம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர்கே சரவன் அதர்வாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

மரகத நாணயம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர்கே சரவன் அதர்வாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் மக்களின் பேராதரவை பெற்ற படம் 'மரகத நாணயம்'. காமெடி கலந்த த்ரில்லர் படமான இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், டேனியல் போப், மீம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் போன்ற பணிகளை ஏஆர்கே சரவன் மேற்கொண்டுள்ளார். தன்னுடைய முதல் படத்திலே மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இவர் முன்னதாக முண்டாசுப்பட்டி படத்தில் இயக்குனர் ராம்குமாருடன் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மரகத நாணயம் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில் இயக்குனர் சரவனின் அடுத்த படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது சரவனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நாயகனாக அதர்வா நடிக்க உள்ளார். தற்போது அதர்வா நடிப்பில் ருக்குமணி வண்டிவருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங், 100 போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் இமைக்கா நொடிகள், பூமராங் படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதன் பிறகு அதர்வா, காவல் துறை அதிகாரியாக சாம் ஆண்டன் இயக்கி வரும் '100' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 90 சதவீத காட்சிகள் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகள் விரைவில் படமாக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு அதர்வா இயக்குனர் சரவன் இயக்க உள்ள புதுப்படத்திற்கு ரெடியாக உள்ளார்.

மரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா