ads

தனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நயன்தாரா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளராக உருவாக்கவுள்ள தன்னுடைய முதல் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நயன்தாரா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளராக உருவாக்கவுள்ள தன்னுடைய முதல் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா 2003 முதல் தற்போது வரை 15 வருடங்களாக முன்னணி நடிகையாக ஆட்சி செய்து வருகிறார். இதுவரை 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவருடைய நடிப்பில் தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, விஸ்வாசம் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. முன்னணி நடிகையாக கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் இவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அறம்' படத்தை இவர் தயாரித்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உண்மையாக மாறியுள்ளது. தயாரிப்பாளராக மாற உள்ள நயன்தாரா, தன்னுடைய முதல் படத்தை தனது காதலருடன் இணைந்து உருவாக்க உள்ளார். ஆம், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கவுள்ள இந்த முதல் படத்தில் நாயகனாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளார்.

ஏற்கனவே நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் 'இமைக்கா நொடிகள்' படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அதர்வா நயன்தாராவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் அதர்வா நயன்தாராவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர், நடிகைகள் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துவரும் நிலையில் அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

தனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா