ads

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இதனால் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த வாரம் ஏவிக்சனுக்கு மும்தாஜின் பிடிவாதத்தால் ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் வித்தியாசமாக நடைபெறுகிறது. முன்பு வரை யாரே வெளியேற்றவேண்டும் என்று ரசிகர்கள் வாக்களித்து வந்த நிலையில் இந்த வாரம் யாரை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வேண்டுமோ அந்த போட்டியாளருக்கு ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்களுக்கு இது புரிந்திருந்தால் சரியாக வாக்களிப்பார்கள். இல்லையெனில் எப்படியும் சில போட்டியாளருக்கு வாக்குகள் தவறாக தான் விழுந்திருக்கும். எப்படியும் இந்த வாரம் ரித்விகா காப்பாற்றப்படுவார் என ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். ஆனால் இந்த வார நாமினேஷனே ஒரே குழப்பத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு நாமினேஷனில் இருந்து விடுபட டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ரித்விகாவை தவிர அனைவருமே டாஸ்கை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இதனால் அவர்கள் இந்த வாரம் காப்பாற்ற படுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி பார்த்தல் மொட்டை அடித்தது, கலர் பூசியது, டேட்டூ வரைந்தது, சாணியில் முக்கியது இதெல்லாம் வேஸ்ட் தானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் கெட்டபெயரை சம்பாதித்து வருகிறார். ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமியும் தொடர்ந்து முகத்தை சுழித்து கொண்டே செல்கின்றனர்.

இதில் ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜ் ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட அதிகபட்ச வாய்ப்புள்ளது. இது தவிர இன்றைய ப்ரோமோவில் கமல் ஹாசன் "நெனச்சதெல்லாம் நடக்கணும்னா இறங்கி வேலை செய்யணும். சும்மா வாய் சொல்லில் வீரராக இருந்தால் போதாது. டிவிட்டர்லயும், ட்ரொல்லையும் குவிஞ்சா போதுமா.களத்தில இறங்கணும்" என்று குத்தி காட்டி பேசுகிறார். ஆனால் இவர் ஐஸ்வர்யாவை சொல்கிறாரா இல்ல மும்தாஜை சொல்கிறாரா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்..

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்