ads

இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணைந்துள்ள சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது 'நந்த கோபால குமரன் - NGK' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதியில் படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா, அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சூர்யாவின் 37வது படமாக உருவாகவுள்ளது. இதன் பிறகு சூர்யாவின் 38வது படத்தை '24' படத்தை இயக்கிய விக்ரம் குமாரும், 39வது படத்தை சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற படங்களை இயக்கிய ஹரியும் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதில் இயக்குனர் ஹரியும், சூர்யாவும் 'சிங்கம் 3' படத்திற்கு பிறகு இணையவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற படங்களுக்கு பிறகு 6வது முறையாக நடிகர் சூர்யாவும், இயக்குனர் ஹரியும் இணைந்துள்ளனர். இந்த படம் சிங்கம் வரிசையில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் படமாக உருவாக உள்ளது. 

இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணைந்துள்ள சூர்யா