ads

தென்காசியில் மாரி 2 படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்

maari 2 movie shooting

maari 2 movie shooting

இயக்குனர் பாலாஜி மோகன் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் தமிழ் அறிமுக படமான 'வாயைமூடி பேசவும்' படத்தை மலையாளத்தில் 'சம்சாரம் ஆரோக்யத்தினு ஆணிகாரம்' என்ற தலைப்பில் ரிமேக் செய்து மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானார். முன்னதாக இவர் கொடி, தி ஜூனியர்ஸ், அட்டி டெய்ல், மிட்டாய் வீடு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை அடுத்து இந்த படத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் சாவுடன் இணைந்து முழு தமிழ் படமாக நடிகர் சித்தார்த், அமலா பால் நடிப்பில் உருவாக்கினர். மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார். இவருடைய இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு 'மாரி' படம் வெளியானது. இந்த படத்தில் கதை, பாடல்கள் போன்ற அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க படக்குழு முடிவு செய்தது. முன்னதாக 'மாரி 2' படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் இசைமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா 'யாரடி நீ மோகினி' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் தந்தையான இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலியில் உள்ள தென்காசியில் தொடங்கியுள்ளனர். முதல் படப்பிடிப்பில் நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு நடிகை வரலட்சுமி தனுசுக்கு வில்லியாக களமிறங்கியுள்ளார். இவர்களுடன் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர்.

தென்காசியில் மாரி 2 படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்