ads

இயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்

director arjun new movie sollividava reviews

director arjun new movie sollividava reviews

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அர்ஜுன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'சொல்லிவிடவா'. இந்த படத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, கன்னட நடிகர் சந்தன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர்.

நடிகர் யோகி பாபு, ஐஸ்வர்யாவுக்கு உதவியாளராக நடித்துள்ளார். தனது தாத்தாவுடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சுஹாசினி பாதுகாவலராக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கும், சுஹாசினியின் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் கார்கில் போர் நடைபெறுகிறது. இந்த போரை படம் பிடிப்பதற்காக ஐஸ்வர்யா, சந்தன் குமார் ஆகிய இருவரும் தங்களது நிறுவனங்கள் சார்பாக டெல்லி அனுப்பப்படுகிறார்கள்.

இந்த சமயத்தில் சந்தன் குமாரின் கேமிரா உடைந்து விடுகிறது. பின்னர் ஒரு கேமிராவை வைத்து மாறி மாறி பணியை செய்யலாம் என்று ஒப்பந்தம் செய்கின்றனர். டெல்லியில் கார்கில் போரை படம்பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இறுதியில் கார்கில் போரை படம் பிடித்தார்களா? காதலில் ஜெயிக்கின்றனரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடிகர் அர்ஜுன் நடனமாடியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட்டின் இசை பக்க பலமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த 'சொல்லிவிடவா' படத்தின் நீளத்தை குறைத்து சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். மேலும் நடிகர் அர்ஜுன் தனது ஒவ்வொரு படமும் தேச பற்றை நிரூபிக்கும் விதமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் தன்னுடைய தேச பற்றை இந்த படத்திலும் மிக சிறப்பாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்