ads

ஐந்து கதைகளை ஒன்றிணைத்து இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கும் குதிரை வால்

காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு குதிரை வால் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு குதிரை வால் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் இறுதியாக வெளியான 'காலா' படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. மும்பை தாராவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி தனது ஐந்தாவது படத்திற்கு 'குதிரை வால்' என்ற தலைப்பினை தேர்வு செய்துள்ளார்.

ஐந்து புதுவிதமான கதைகளை இந்த படத்தில் இணைக்க உள்ளாராம். ஒவ்வொரு கதையையும் தனித்தனி இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இதனால் இந்த படத்தில் ஐந்து கதைகளை இயக்க உள்ள இயக்குனர்கள் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளது.

ஏற்கனவே 6 வித்தியாசமான கதைகள் ஒன்றிணைந்து '6 அத்தியாயம்' என்ற தலைப்பில் வெளியான நிலையில் ஐந்து கதைகளை ஒன்றிணைத்து இயக்குனர் பா ரஞ்சித் 'குதிரை வால்' என்ற படத்தை உருவாக்க உள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் 'பரியேறும் பெருமாள்' படத்தினை தயாரித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு தனது அடுத்த படத்திற்கான பணிகளில் களமிறங்கவுள்ளார்.

ஐந்து கதைகளை ஒன்றிணைத்து இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கும் குதிரை வால்