ads

டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை

இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சங்கர், இரண்டு வருடங்களுக்கு ஒரு தரமான படத்தை ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். இவர் தற்போது விக்ரமின் 'ஐ' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு கமல் ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் படப்பிடிப்பு முடிந்து வருடமே முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் வெளியீட்டிற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாக இருந்த நிலையில் திடீரென இணையதளத்தில் கசிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு டீசரை வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஐபிஎல் இறுதி போட்டியில் வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இயக்குனர் சங்கருக்கு முதலில் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எடிட்டிங் செய்த பிறகு பூர்த்தி அடையாயாததால் தொடர்ந்து இந்த படத்தின் பணிகள் நடைபெற்று கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடுகளால், செல்போன் டவர்களும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அதிகரித்து வருகிறது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் சிட்டு குருவியின் இனப்பெருக்கத்தை பாதித்து, தற்போது சிட்டு குருவி இனம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அழிவு இனத்தை சேர்ந்த சிட்டு குருவிக்கு அதிசய சக்திகள் கிடைக்கிறது. இதனால் சிட்டு குருவி இனத்தின் அழிவுக்கு காரணமாக உள்ள உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களை அதிசய சக்திகள் கொண்ட சிட்டு குருவி வில்லன் அழித்து இந்த உலகத்தை ஆட்டிப்படைக்க நினைக்கிறது. இதனால் ஆராய்ச்சியாளர் வசீகரன் நம் மக்களை காப்பாற்ற மீண்டும் ரோபோட்டை உருவாக்குகிறார். வசீகரன் உருவாக்கிய சிட்டி ரோபோவுக்கு, சிட்டு குருவி வில்லனுக்கும் இடையேயான மோதல்கள் தான் இந்த படத்தின் கதை என்று தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் சிட்டு குருவி வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

முதல் பாகம் போல இந்த படத்திலும் ரஜினிகாந்த் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் 100 நிமிடங்கள் அதாவது 1:40 மணி நேரம் வரை மட்டுமே ஓட கூடியது. பொதுவாக சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்தின் உச்சிக்கே ரசிகர்களை கொண்டு செல்லும். அந்த வகையில் இந்த படத்திலும் ரசிகர்களை கவர காமெடி, காதல், பாடல் உள்ளிட்ட காட்சிகளை தவிர்த்து விட்டார் இயக்குனர் சங்கர்.  இந்த படத்தின் பிரமாண்டத்தை காண ஆர்வமுடன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது டீசரை தொடர்ந்து படத்தின் கதையும் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு மேன்மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை