ads

பிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் சாகச நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் சாகச நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் பாடகரான துல்கர் சல்மான் கடந்த ஆறு வருடங்களாக 23 படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக நடிகையர் திலகம் படம் வெளியானது. மலையாள நடிகரான இவர் அவ்வப்போது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இவருடைய நடிப்பில் அடுத்ததாக தமிழில் உருவாகவுள்ள புதுப்பட தலைப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த படத்திற்கு 'வான்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிரபல எழுத்தாளரான ரா கார்த்திக் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்தின் மூலம் ரா கார்த்திக் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பயணம், சாகசங்கள் நிறைந்ததாக உருவாகவுள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செல்வகுமார் தயாரிக்க உள்ளார். துல்கர் சல்மான் சாகச வீரனாக நடிக்க உள்ள இந்த படத்தில் இவருக்கு மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.

இதில் நிவேதா பெத்துராஜ் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது துல்கர் சல்மான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 'வான்' படத்தில் நடிக்க உள்ளார். மேலும் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வந்த துல்கர் சல்மான் தற்போது ஹிந்தி துறையிலும் அறிமுகமாக உள்ளார். இவரது நடிப்பில் இந்தியில் 'கர்வான்' படம் ஆகாஷ் குர்னா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

Photo Credit - @dulQuer (Twitter)Photo Credit - @dulQuer (Twitter)

பிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்