ads

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்

அங்காடி தெரு படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.

அங்காடி தெரு படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.

நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இருவரும் 'அங்காடி தெரு' படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் விஜய் ஆண்டனி இசையமைத்தார். இந்த  படத்திற்கு பிறகு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான படம் 'அரவான்'.

இந்த படத்தின் இசையமைப்பாளராக பின்னணி பாடகர் கார்த்திக் என்பவரை அறிமுகப்படுத்தினார் வசந்த பாலன். இதற்கிடையில் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், நாயகனாக 'டார்லிங்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, ப்ருஸ் லீ, நாச்சியார் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பிடித்து விட்டார். இவருடைய நடிப்பில் மேலும் 10 படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படங்களுக்கு பிறகு நடிகர் ஜிவி பிரகாஷ், தன்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் வசந்த பாலன் "காவிய தலைவன் படத்திற்கு பிறகு நான் இயக்க உள்ள புதுப்படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் சீரியஸான சென்னையில் நடக்கும் கதை. இந்த படத்தில் பணிபுரியவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்