ads

போலீஸ் கெட்டப்பை தொடரும் ஜெயம் ரவி

jeyam ravi plays as cop in adanga maru movie

jeyam ravi plays as cop in adanga maru movie

சக்தி  சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இந்தியாவில் முதல் முறையாக விண்வெளியை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படத்தில் ஜெயம் ரவி மாஜிக் மேன் கெட்டப்பை கையாண்டிருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டரான வில்லன் கதாபாத்திரத்தில் ஆரோன் அஜீஸ் இணைத்துள்ளார். மேலும் பேசத்தக்க மற்ற கதாபாத்திரத்தில் ஜெய பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுன், மன்ஸுர் அலி கான், வின்சன்ட் உட்பட பலர் நடித்துள்ளனர்.    

இந்த படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’, புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ மற்றும் ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹமத் இயக்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம் என பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். தற்பொழுது ஜெயம் ரவி 'அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள மணி மஹாலில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.   

'ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக அதர்வாவின் 'இமைக்கா நொடிகள்' புகழ் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். நடிகர் ஜெயம் ரவியின் 24வது படமான அடங்கு மறுவில் தற்பொழுது இசையில் வளர்ந்து வரும் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். மேலும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராக இணைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி போலீஸ் கெட்டப்பை கையாண்டிருதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு முன்னதாகவே தனி ஒருவன், மிருதன், போகன் போன்ற படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.       

போலீஸ் கெட்டப்பை தொடரும் ஜெயம் ரவி