ads

ஜெயம் ரவியின் 'அடங்க மறு' அடுத்த கட்ட படப்பிடிப்பு

adanga maru movie shooting

adanga maru movie shooting

வனமகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படத்தினை சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்தார். இந்தியாவின் முதல் விண்கலம் படம் என்பதால் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு திரைத்துறை சார்ந்தவர்களிடமும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘அடங்க மறு படத்தினை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான சிறப்பு பூஜை கடந்த 14ம் தேதி நடைபெற்று படத்தின் படப்பிடிப்புகளும் துவங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள மணி மஹாலில் வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கவிருப்பதாக படக்குழு திட்டமிட்டிருக்கிறது. 

இந்த படத்தினை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வரலாற்று சார்ந்த 'சங்கமித்ரா' படத்திலும், ‘என்றென்றும் புன்னகை’ புகழ் இயக்குநர் அஹமத் இயக்கவிருக்கும் ஒரு புது படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமளித்துள்ளார்.   

        

adanga maru movie shootingadanga maru movie shooting

ஜெயம் ரவியின் 'அடங்க மறு' அடுத்த கட்ட படப்பிடிப்பு