ads

மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ள கார்த்தி

மம்முட்டி அரசியல்வாதியாக நடித்து வரும் யாத்ரா என்ற படத்தில் கார்த்தி மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி அரசியல்வாதியாக நடித்து வரும் யாத்ரா என்ற படத்தில் கார்த்தி மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி நடிப்பில் யாத்ரா, பேரன்பு, மாமாங்கம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மகி வி ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'யாத்ரா' என்ற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இந்த படம் மறைந்த முன்னாள் ஆந்திர பிரதேச முதலமைச்சரான ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டதாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது நடிகர் கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது. இந்த தகவல் உறுதியானால் 'ஊபிரி' மற்றும் தற்போது வெளியாகியுள்ள 'சின்ன பாபு' படங்களுக்கு பிறகு தெலுங்கு திரையுலகிற்கு மூன்றாவது முறையாக கார்த்தி அறிமுகமாகிறார்.

நேரடியாக கார்த்தி தெலுங்கில் நடிக்காவிட்டாலும் கார்த்தியின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதனால் தெலுங்கு திரையுலகிலும் கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தற்போது தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ள 'சின்ன பாபு' படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. யாத்ரா படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியானால் முதன் முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் மலையாள நடிகரான மம்முட்டி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் யாத்ரா படத்தில் கால் பதிக்கிறார்.

மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ள கார்த்தி