ads

சிறுத்தையை போன்று அதிரடியாக உருவாகும் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்

கார்த்தியின் அடுத்த படம் 55 கோடி செலவில் சிறுத்தை படத்தை போன்று ஆக்சன் அட்வன்ச்சர் படமாக உருவாக உள்ளது.

கார்த்தியின் அடுத்த படம் 55 கோடி செலவில் சிறுத்தை படத்தை போன்று ஆக்சன் அட்வன்ச்சர் படமாக உருவாக உள்ளது.

நடிகர் கார்த்தி தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு புதுமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இன்று ஐதராபாத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படமாக சிறுத்தை படத்தை போன்று உருவாக உள்ளதாம்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ராகுல் ப்ரீத் சிங் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்திற்கு தனது அண்ணன் சூர்யாவின் மகன் பெயரான தேவ் என்ற பெயரை இந்த படத்திற்கு வைத்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் சிங்கம் 2 படத்தையும், திரிஷாவின் மோகினி படத்தையும் தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மொத்த படஜெட் மட்டும் 55 கோடியாம்.

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை இமய மலை, மும்பை, ஐதராபாத் மற்றும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். தொடர்ந்து நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்து வரும் கார்த்திக்கின் இந்த படமும் நிச்சயம் ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை தொடர்ந்து இன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில், கார் சேசிங் மற்றும் ஒரு பாடல் காட்சியும் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்கின் லுக்கும் அவரது ஸ்டைலும் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

சிறுத்தையை போன்று அதிரடியாக உருவாகும் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்