ads

மைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்

vishal speech on kee movie audio launch

vishal speech on kee movie audio launch

'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ள படம் 'கீ'. இந்த படத்தை இயக்குனர் காலீஸ் இயக்கியுள்ளார். நாயகனாக ஜீவா நடிக்க நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, விஷால், ஜீவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன், பிஎல் தேனப்பன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்குபெற்று உரையாடினார்.

முதலில் பேசிய பிஎல் தேனப்பன், தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் சிம்பு மீது அளித்த புகாருக்கு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இசை வெளியீட்டு விழாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக விஷால் "முதலாக ஜீவா நடித்துள்ள கீ படத்தின் பாடல்களும் டிரைலரும் மிக சிறப்பானதாக வந்துள்ளது. இதற்கு கீ படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது குறித்து சிம்பு தரப்பில் எந்தவித பதிலும் வராததால் இந்த பிரச்சனையை முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் நிலையை அறிந்துதான் எனது 'இரும்புத்திரை' படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ஆம் தேதியில் இருந்து தள்ளி வைத்துள்ளேன். இதை அடுத்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நான் நடிக்க தயாராக உள்ளேன். படம் வெற்றி அடைந்தால் அவர் அளிக்கும் சம்பளத்தை பெற்று கொள்வேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

மைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்