ads

மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்

40 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது மாரி 2 படக்குழு

40 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது மாரி 2 படக்குழு

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தற்போது 'மாரி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, சாய் பல்லவி நாயகியாக இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சாய் பல்லவி தனுசுடன் இணைந்துள்ளார்.

முதல் பாகத்தில் காஜல் நாயகியாக நடித்திருந்தார் ஆனால் இந்த படத்தில் அவருக்கு பதிலாக சாய் பல்லவி நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தனது டிவிட்டரில் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்து விட்டதாகவும், தயாரிப்பாளர் பிரச்சனை முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாயகியாக நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது இந்த படத்தில் வில்லி அவதாரம் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' படத்திலும் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்தில் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இந்த படத்தை 

மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்