ads

தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நாயகி ரெடி

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் நாயகி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் நாயகி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படத்தில் காமெடி நடிகர்கள் கருணாஸ், ஆனந்த் ராஜ், லொள்ளு சபா மனோகர், மொட்டை ராஜேந்திரன், மயில் சாமி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

காமெடி கலந்த பேய் படமான இந்த படம் ரசிகர்கள் மனதில் பேசும் படமாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் ராம்பாலா இயக்கி வருகிறார். தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நாயகனாக சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக மலையாள நடிகையான ஷிர்த்தா சிவதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மலையாள நடிகையான இவர் 2012 முதல் மலையாளத்தில் 12 படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு தற்போது தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து இயக்குனர் ராம் பாலா கூறுகையில் "தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகம் காமெடி கலந்த திகில் படமாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாகம் காமெடியுடன் அதிகமாக சீரியஸ் காட்சிகள் இடம் பெறவுள்ளது. இரண்டாம் பாகம் கதாநாயகியிடம் இருந்து பயணிக்கும் கதையாக இருக்கும்.

இந்த படத்தின் நாயகியாக ஷிர்த்தா சிவதாஸை ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த படத்தில் நாயகியாக மலையாளம் பேசக்கூடிய பெண் தேவை என்பதால் தான் ஷிர்த்தா சிவதாஸை தேர்வு செய்துள்ளோம். முதல் பாகத்தை விட இந்த படத்தில் எங்களது அதிக முயற்சியினை கொடுத்துள்ளோம். இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப சிறப்பானதாக இருக்கும். இந்த படத்தை செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நாயகி ரெடி