ads

கௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்தில் இணைந்த மஞ்சிமா மோகன்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார்.

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார்.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அட்லட் காமெடி படமான இந்த படத்திற்கு தொடர்ந்த எதிர்ப்புகளால் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் அப்பா மகன்கள் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவையை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து இந்த படம் ஜூலை 6ஆம் தேதி வெளிவருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதன் பிறகு தற்போது இந்த படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் முத்தையா இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார்.

கௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்தில் இணைந்த மஞ்சிமா மோகன்