ads

தெலுங்கில் இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் இணையும் இயக்குனர் ராஜமௌலி

rajamouli joined telugu superstars

rajamouli joined telugu superstars

பாகுபலி படத்தின் மூலம் திரையுலக வட்டாரம் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அசந்து போகும் அளவிற்கு வெற்றியை பெற்ற இயக்குனர் ராஜமௌலி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில் இருந்தது. மேலும் ரஜினிகாந்த், ரமேஷ் பாபு நாயகனாக வைத்து படத்தினை எடுப்பதாக பல ரூமர் தகவல்கள் வந்த நிலையில் இருந்தது.     

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைய போவதாக ஒரு தகவலை ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். முன்பு பாகுபலி படத்தின் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைத்திருந்த ராஜமௌலி தற்பொழுது ராம் சரண், ஜுனியர் என்.டி. ஆர் - வுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சரில் வைத்த்துள்ளார். இதன் காரணத்தினால் இவர்களுடன் இணைய போவதாக பல தகவல்கள் வந்துள்ளது.        

ராஜமௌலியின் அடுத்த கட்ட படம் தெலுங்கின் இரண்டு மாஸ் ஈரோக்களை வைத்து எடுக்க இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னும் சில நாட்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.    

தெலுங்கில் இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் இணையும் இயக்குனர் ராஜமௌலி