ads

பிரபு தேவாவின் யங் மங் சங் படப்பிடிப்பில் நிஜ கத்தி குத்து

பிரபு தேவா மற்றும் லட்சுமி மேனன் நடித்து வரும் யங் மங் சங் படப்பிடிப்பில் உண்மையாகவே ஒரு கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரபு தேவா மற்றும் லட்சுமி மேனன் நடித்து வரும் யங் மங் சங் படப்பிடிப்பில் உண்மையாகவே ஒரு கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் 'மெர்குரி' படத்திற்கு பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், காமோஷி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் புதுமுக இயக்குனரான எம்எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் 'யங் மங் சங்' படத்தில் பிரபு தேவா குங் பூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1970-90 காலங்களில் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் திடீரென்று விலக தற்போது லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் மற்றும் காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மும்முரமாக நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. புதுசேரியில் வில்லியனுர் என்ற பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உணவு இடைவேளையின் போது படக்குழுவினர் மற்றும் கோயில் தொழிலாளர்கள் ஆகியோருக்கு உணவு பரிமாறப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இரண்டு பேர் எங்களுக்கும் உணவு வழங்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு பரிமாறும் ஊழியர்கள் மறுக்க, கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து வேடிக்கை பார்த்த இரண்டு பேர் ஊழியர்களை குத்தியுள்ளனர். தற்போது காயமடைந்த ஊழியர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் பிறகு தப்பியோட முயன்ற இருவரையும் படக்குழு மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிரபு தேவாவின் யங் மங் சங் படப்பிடிப்பில் நிஜ கத்தி குத்து