ads

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நயன்தாராவின் படப்பிடிப்பு

வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணி தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணி தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீம ராஜா' படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாருடன் இணைந்து அறிவியல் சார்ந்த படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே போன்ற காமெடி படங்களை ரசிகர்களுக்கு அளித்த இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் தொலைகாட்சி உரிமையை முன்னதாக சன்  பிக்ச்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது. சமந்தா, ராகுல் ப்ரீத் சிங், நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து வரும் சிவகார்த்திகயேன் தற்போது தனது நண்பர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

Photo Credit - @@StudioGreen2 (Twitter)Photo Credit - @@StudioGreen2 (Twitter)
Photo Credit - @@StudioGreen2 (Twitter)Photo Credit - @@StudioGreen2 (Twitter)

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நயன்தாராவின் படப்பிடிப்பு