ads

அட்லீ இயக்கவிருக்கும் திரையுலக பிரபலம் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

rajinikanth and atlee team up

rajinikanth and atlee team up

தமிழ் திரையுலகில் இயக்குனர்களின் ஒருவரான அட்லீ குறைந்த வயதில் வெற்றி படங்களை இயக்கி திரையுலகில் சிறந்த இயக்குனராக வளம் வருகிறார். இவர் திரைப்படங்களை  இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன், எந்திரன் போன்ற படங்களில் பணிபுரிந்து காதலை மையமாக வைத்து உருவான 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசத்தக்க படமாக வளம் வருகிறது.   

இந்த வெற்றி படத்தினை தொடந்து விஜய்யின் 59வது படமான 'தெறி' படத்தினை இயக்கினார். மேலும் மீண்டும் அவர்களின் கூட்டணியில் 'மெர்சல்' படம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு இயக்குனர் அட்லீயின் வரவேற்புகளும் திரைத்துறையில் அதிகரித்திருந்தது. இவரது இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான சீமா விருது மற்றும் விஜய் விருது, சிறந்த கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளருக்கான விஜய் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான Edison விருது வழங்கப்பட்டது. மேலும் 'தெறி' படத்திற்காக பிலிம் பேர் விருது பரிந்துரைக்கப்பட்டதோடு சிறந்த இயக்குனருக்கான சீமா விருது வழங்கப்பட்டது.     

இந்நிலையில் இயக்குனர் அட்லீ மீண்டும் விஜய்யின் புது படத்தினை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பரவியது. தற்பொழுது வந்த தகவலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் இயக்குனர் அட்லீ ஒரு கதை சொன்னதாகவும், இந்த கதை ரஜிகாந்த்திற்கு பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தினை புகழ் பெற்ற தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவலில் வெளிவந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.     

அட்லீ இயக்கவிருக்கும் திரையுலக பிரபலம் மகிழ்ச்சியில் ரசிகர்கள்