ads

சூர்யாவின் 37வது படத்தின் முக்கிய தகவல்

suriya 37 movie shooting updates

suriya 37 movie shooting updates

சூர்யா தனது 36வது படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தின் பற்றிய தகவல் கடந்த நாட்களில் வெளிவந்தது. இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக்கவுள்ளார். இவர்களின் கூட்டணி இதற்கு முன்னதாகவே அயன், மாற்றான் போன்ற படங்களின் மூலம் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக இணையவுள்ள இப்படத்தின் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தினை வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. 

தென்னிந்திய திரைப்படத்தின் சிறந்த ஒளிபதிவர்களின் ஒருவர் கே. வி. ஆனந்த். இவர் ஒளிப்பதிவில் மட்டும் ஈடுபடாமல் சில படங்களை இயக்கி இயக்குனராகவும் வளம் வருகிறார். பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே. வி. ஆனந்த், கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த 'கனா கண்டேன்' மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த 'அயன்' திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். இவரின் முதல் ஒளிப்பதிவு படமான 'தென்மாவின் கொம்பத்து' என்ற மலையாள படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'முதல்வன்' படத்திற்கு ஒளிப்பதிவு பணியை சிறப்பாக செய்ததின் மூலம் அவரது திறமைக்காகவும் பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டுக்கள் பல கிடைத்திருந்தது குறிப்பிடக்கத்து. 

சூர்யாவின் 37வது படத்தின் முக்கிய தகவல்