ads

மெர்சல் படத்திற்கு பிரிட்டனில் தேசிய விருது ஆனால் விஜய் ரசிகர்கள் கோபம்

மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் தேசிய விருது கிடைத்துள்ளது, ஆனால் விஜய் ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.

மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் தேசிய விருது கிடைத்துள்ளது, ஆனால் விஜய் ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளியில் இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மெர்சல்'. இந்த படம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்தில் விஜய், அப்பா, மருத்துவர் மற்றும் மேஜிக் மென் போன்ற மூன்று கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றார்.

இந்த படத்தின் வெற்றிக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசை பக்க பலமாக இருந்தது. இந்த படம் வெளியானதில் இருந்து இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை ரசிகர்களின் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. பல்வேறு விருதுகளை பெற்ற இந்த படத்திற்கு பிரிட்டனின் தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.

'மெர்சல்' படத்திற்கு தேசிய விருது கொடுத்த நேரத்தில், தளபதி விஜயை இந்த படத்தின் சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக நாமினி செய்துள்ளனர். இந்த படத்தின் நாயகனாக மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளபோது விஜயை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. இதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை?. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மெர்சல் படத்திற்கு பிரிட்டனில் தேசிய விருது ஆனால் விஜய் ரசிகர்கள் கோபம்