ads

மன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்

அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவர் சிறையில் உள்ளார் - சிலம்பரசன்

அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவர் சிறையில் உள்ளார் - சிலம்பரசன்

காவிரி நீருக்காக தனி வழியில் போராடி வரும் சிம்பு, போராட்டத்தின் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி இன்று காலை 9:00 மணியளவில் எக்மோர் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழன் என்ற உணர்வோடு நல்ல எண்ணத்திற்காக போராடினார் மன்சூர் அலிகான். ஒரு தமிழனாக என்னையும் கைது செய்யுங்கள் என தாமாக முன்வந்தவர் மன்சூர் அலிகான். யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என கேட்க இங்கு வரவில்லை.

அவருடைய மகன் அலிகான் துக்லக், அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் சிறையில் இருப்பதாக தெரிவித்ததனால் அவர் என்ன நிலையில் எதற்காக கைதானார் என்பதை அறியவே இங்கு வந்துள்ளேன். அவர் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவர் செய்தது தவறு என்றால் போராட்டத்தின் போது அனைவர் செய்ததும் தவறு அதற்காக அனைவரையும் கைது செய்ய வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்ளுங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

மன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்