ads

கந்துவட்டி கொடுமை - சுசீந்திரன் ட்விட்டர்

suseenthiran tweet

suseenthiran tweet

கந்துவட்டி காரணத்தினால் துணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்ததினை பற்றி இயக்குனர் சுசீந்திரன் அவரது ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். 

அனைவருக்கும் வணக்கம். அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். ஒரு அதிர்ச்சி தகவலை தெவித்து கொள்கிறேன். 'நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்பு செழியனால்  அஜித் சாரும், அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெவித்து கொள்கிறேன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்கள் லிங்கு சாமி சார், கவுதம் மேனன் சார், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புசெழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இமான் இசையமைப்பாளரும் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்து கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த அவலநிலைக்கு காரணமான அன்பு செழியன் தண்டிக்க பட வேண்டும்.

 மத்திய அரசுக்கும், வருவாய் துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டில் பாதி பணம்  அன்புவிடம் இருக்கும் தயவு செய்து அவர் வீட்டில் ரெய்டு செல்லவும்.

 இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரனை கிண்டல் செய்யும் விதமாக 'அப்போ எல்லாம் பேசாம இப்போ பேசுறீங்க எதுவும் அன்புக்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களா.....அஜித்தை வைத்து ஏன் விளம்பரம் தேடுகிறிங்க'என்று ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

 இதற்கு பதிலடியாக சுசீந்திரன் 'அன்புசெழியன் இல்ல எவகிட்டையும் 1ரூபாய் கூட கடன் வாங்கியது இல்ல. விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அன்புசெழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டியதே எனது நோக்கம்' என்று பதில் அளித்துள்ளார்.               

கந்துவட்டி கொடுமை - சுசீந்திரன் ட்விட்டர்