ads

தனுஷ் இயக்கும் புதுபடத்தில் இணைந்த நாகர்ஜுனா

actor nagarjuna team up with dhanush after thozha

actor nagarjuna team up with dhanush after thozha

'பவர் பாண்டி' படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள புது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் தெலுங்கு முன்னணி நடிகரான நாகர்ஜூனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக நடிகர் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர் தற்போது நடித்து வரும் 'சயிரா' என்ற படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்கள் நடைபெறவுள்ளதால் அவரால் உடனடியாக நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அதன் பிறகு தற்போது நடிகர் நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாகர்ஜுனா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'தோழா' படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஒரே நேரத்தில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தில் சாய் பல்லவி, ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

தனுஷ் இயக்கும் புதுபடத்தில் இணைந்த நாகர்ஜுனா