ads

தனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் மாரி 2 படத்தில் தற்போது வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் மாரி 2 படத்தில் தற்போது வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாரி 2'. 2015இல் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுடன் இந்திய மாடலான வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கேரளா, ஆலப்புழாவை சேர்ந்தவரான இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருடைய முதல் படம் 2014இல் வெளியான 'சைவம்'. இந்த படத்திற்கு பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் அசுரகுலம், களரி, ஒத்தைக்கு ஒத்த, தடம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. தமிழ் திரைத்துறையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Photo credit - @Vidya_actress (Twitter)Photo credit - @Vidya_actress (Twitter)

தனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்