ads

செக்கச் சிவந்த வானம் படத்தின் புதிய தகவல்

chekka chivantha vaanam shooting start today

chekka chivantha vaanam shooting start today

தமிழ் திரையுலகின் சிறந்த முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது திரையுலக நட்சத்திரங்களை கொண்டு 'செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தினை இயக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நட்சத்திரகளை இணைத்து எடுக்கவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு நிலவி  வருகிறது. மேலும் இவரது படங்கள் என்றாலே சுருக்கமான வசனத்திற்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை என்பதாலும் நாளுக்கு நாள் வரவேற்புகளும் அதிகரித்து வருகிறது. 

படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் துவங்கவிருப்பதாக படக்குழு முன்னதாகவே தகவலை வெளியிட்டிருந்தது. சில காரணத்தினால் ஜனவரி மாதத்தில் துவங்க இருந்த படப்பிடிப்பு இன்று (12.2.2018) சென்னையில் உள்ள நீலாங்கரையில் துவக்கப்பட்டது. சென்னை பகுதியில் துவக்கப்பட்ட ஷூட்டிங்கை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் வெளிநாட்டு பகுதியிலும் எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்களில் நிறைவடைய படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்பொழுது வெளிவந்த தகவலை போன்று ஷூட்டிங்கை 55 நாட்களில் நிறைவு பெற்றால் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படங்களில் குறுகிய காலத்தில் வெளியாகும் படம் என்ற பெருமை இப்படத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.     

பிரபல லைக்கா ப்ரொடெக்சன் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக படம் முழுக்க நிறைந்திருப்பதாக வெளிவந்த தகவலை தொடந்து மற்ற நடிகர்களின் கதாபாத்திரத்தை வெளியிடாமல் சஸ்பென்சை அதிகப்படுத்தி வருகின்றனர்.  

செக்கச் சிவந்த வானம் படத்தின் புதிய தகவல்