ads

துல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாள நடிகரான துல்கர் சல்மான் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த மே மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் 'நடிகையர் திலகம்' வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. இந்த படத்திற்கு பிறகு துல்கர் சல்மான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகியாக ரிது வர்மா நடித்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி துல்கர் சல்மானின் 25வது படமான இந்த படத்திற்கு மசாலா கஃபே இசைக்குழு இசையமைத்து வருகிறது.

மசாலா கஃபே இசைக்குழு முன்னதாக உறியடி, துல்கர் சல்மானின் சோலோ போன்ற படங்களில் சில பாடல்களில் பணிபுரிந்துள்ளது. இதன் பிறகு மீண்டும் துல்கர் சல்மான் படத்தின் மூலம் மொத்த இசையமைப்பு பணிகளையும் மசாலா கஃபே இசைக்குழு மேற்கொள்கிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது. 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு மசாலா கஃபே இசைக்குழு இசையமைத்து வருகிறது.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு மசாலா கஃபே இசைக்குழு இசையமைத்து வருகிறது.

துல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி