ads

பவன் கல்யாண் படத்தின் டப்பிங் முடிவு - கீர்த்தி சுரேஷ்

keerthi suresh

keerthi suresh

தமிழ் திரையுலகில் தற்பொழுது கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றதினை தொடர்ந்து தமிழ் திரையில் முதல் முதலாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.  ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா போன்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.    

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாணின் 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஹாரிகா & ஹஸ்ஸின் கிரேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ராதா கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். தமிழ் திரையின் இசையின் இளம் புயலான அனிருத் இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகின்றார்.   

 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டப்பிங் பணியில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ் அவரது ட்விட்டரில்  தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக டப்பிங் செய்திருப்பதாகவும், எனது டப் வேலை முடிந்து விட்டதாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் படத்தின் டைட்டிலை நாளை வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார். 

பவன் கல்யாண் படத்தின் டப்பிங் முடிவு - கீர்த்தி சுரேஷ்