ads

முதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு ஐந்தாவது முறையாக நயன்தாரா மம்முட்டி ஆகியோர் தெலுங்கில் யாத்ரா என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு ஐந்தாவது முறையாக நயன்தாரா மம்முட்டி ஆகியோர் தெலுங்கில் யாத்ரா என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

நடிகர் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் இறுதியாக கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இவர்களது கூட்டணியில் 4வது முறையாக இணைந்து மலையாளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

மம்முட்டி, நயன்தாரா கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் ராப்பகல், தாஷ்கர வீரன், புதிய நியமம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக மம்முட்டி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு 'யாத்ரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மலையாளத்தில் இணைந்து நடித்த மம்முட்டி, நயன்தாரா தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளனர். இந்த படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்து உருவாக உள்ளது. இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளார்.

அவருக்கு மனைவியாக நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மஹி ராகவ் இயக்க உள்ளார். இவர் முன்னதாக நடிகை டாப்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அநண்டோ பிரம்மா' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

முதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி