ads

சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்

ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் அடுத்த ஜூன் மாதம் 7ஆம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதன் பிறகு உலகம் முழுவதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் உலகம் முழுவதுமுள்ள 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படங்களான பிட்சா, இறைவி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இதனால் இந்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாத்திரத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரான திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது வரை 33 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இதில் சக்தி, காதலா காதலா, ஆளவந்தான், ஹே ராம், லிட்டில் ஜான், கிரீடம், 24, வனமகன், மெர்குரி போன்ற 11 தமிழ்ப்படங்கள் இவருடைய ஒளிப்பதிவில் வெளிவந்த மாபெரும் வெற்றி அடைந்தவை. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 24 படம் இவருக்கு தேசிய விருதினை அளித்தது. மேலும் இவருடைய ஒளிப்பதிவில் இறுதியாக வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்று வரும் மெர்குரி படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்