ads

ரஜிகாந்த் ஜனவரியில் அரசியல் தகவல்களை வெளியிடுவார் - சத்யநாராயணன் பேட்டி

rajinikanth press meet

rajinikanth press meet

ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஜினியை அரசியலுக்கு வரும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். அன்றிருந்து இன்றுவரை ரஜினியின் தரப்பில் இருந்து எந்த வித தகவலையும் வெளிப்படுத்த வில்லை.முன்பு வந்த தகவலில் டிசம்பர் மாதம் அவரின் பிறந்தநாளில் அரசியல் சம்மந்தமான கருத்துக்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.    

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்லத்திருமணத்தில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் கலந்துகொண்டு திருமண விழாவை சிறப்பித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார்.   

ரஜினி அறிவித்த போர்களம் இன்னும் துவங்கவில்லை. அவரின் பிறந்தநாள் அன்று அரசியல் சம்மந்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரசிகர்களை சந்தித்து இது பற்றிய செய்திகள் தெரிவிப்பார் மற்றும் மக்கள் ஆதரித்தால் அவர்களுக்கு நல்லதே செய்வார் என்றும் கூறியுள்ளார்.   

இதனை அடுத்து ட்விட்டரின் மூலம் கருத்துக்களை பகிர்ந்து வந்த கமல்ஹாசன், விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் தனி கட்சி அமைக்கவிருப்பதாகவும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இருவரும் அரசியலுக்கு வந்தால் யாருடைய கட்சிக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ரஜிகாந்த் ஜனவரியில் அரசியல் தகவல்களை வெளியிடுவார் - சத்யநாராயணன் பேட்டி