ads

சமந்தாவின் புது பட கூட்டணி மகிழ்ச்சியில் ரசிகர்கள்

samantha to team up nagachaitanya

samantha to team up nagachaitanya

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்ததோடு தற்பொழுது  இரும்பு திரை, சூப்பர் டீலக்ஸ், ரங்கஸ்தலம், மகாநதி மற்றும் சிவகார்த்திகேயனின் பெயரிடாத புது படம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த நாட்களில் திருமணம் நடந்த பிறகும் படங்களில் நடிப்பதில் அதிகளவு ஆர்வத்தை காட்டிவருகிறார். இவர் முதல் முதலில் 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் சிறப்பாக நடித்து தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தினார்.     

தற்பொழுது இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட  நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்கு முன்னதாகவே 'ஏ மாய சேசாவே' என்ற படத்தில் இணைத்து நடித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இணைத்து நடிக்கவுள்ளனர். இதன் காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்தினை இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான சிவா நிர்வாணா என்பவர் இயக்கவுள்ளார். இவர் திரையுலகில் கடந்த ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த 'நின்னு கோரி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்பொழுது சமந்தா, நாக சைதன்யா நடிப்பில் காதலை மையமாக வைத்து ஒரு புது படத்தினை இயக்கவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் இப்புது படத்தின் தகவல் அதிகார பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சமந்தாவின் புது பட கூட்டணி மகிழ்ச்சியில் ரசிகர்கள்