ads

நட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ ட்விட்டரில் சசிகுமார்

sasikumar tweet with nadodigal 2 updates

sasikumar tweet with nadodigal 2 updates

கடந்த 2009ம் ஆண்டில் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் சிறந்த நட்பிற்கு எடுத்துக்காட்டும் வகையில் நட்பினை மையப்படுத்தி உருவாக்கிய 'நாடோடிகள்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்திற்காக இயக்குனர் சமுத்திரக்கனி முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, விஜய் விருது போன்றவை பெற்றிருந்தார். மேலும்  சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருதுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.  

மூன்றாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் 'நாடோடிகள் 2' படத்தில் சசிகுமாரருடன் இணைந்து இரண்டாவது நாயகனாக சமுத்திரக்கனி வளம் வரவுள்ளார். இவர்களுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிக்க உள்ளனர். நட்பினை மையமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் சூப்பர் சுப்பராயன், எம்எஸ் பாஸ்கர், பரணி, துளசி, ஸ்ரீ ரஞ்சனி, நமோ நாராயணன், ஞான சம்பந்தம் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் அதுல்யா ரவி கதாபாத்திரம் முக்கிய காட்சிகளை மையப்படுத்தும் வகையில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும் இப்படத்தில் முதல் பாகத்தை போன்று சசிகுமார் காதலுக்கு ஆதரவு கொடுக்கும் காட்சிகள் இடம் பெறுமா என ரசிகர்களிடம் கேள்விகள் எழுப்பி வருகிறது. இயக்குனர் சமுத்திரக்கனி மற்றொரு நாயகனாக நடிப்பதால் காதலில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெறுமா எனவும் கேள்விகள் வெளிவந்துள்ளது. தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் சசிகுமார் அவரது ட்விட்டரில் 'நட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ' என்று பதிவு செய்ததோடு சமுத்திரக்கனியுடன் இணைத்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணத்தினால் நட்பிற்கு முக்கியத்தும் கொடுக்கும் இன்னும் பல காட்சிகள் இடம் பெறுவது உறுதிப்படுத்தியுள்ளார்.     

நட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ ட்விட்டரில் சசிகுமார்