ads

நாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்

சசிகுமார் நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சுப்ரமணியபுரம் 2 படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.

சசிகுமார் நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சுப்ரமணியபுரம் 2 படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'சுந்தரபாண்டியன்'. இந்த படம் சசிகுமாருக்கு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் என்பவரை சசிகுமார் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் முன்னதாக சுபராமணியபுரம், ஈசன் போன்ற படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். 'சுந்தரபாண்டியன்' படத்திற்கு பிறகு இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் 'இது கதிர்வேலன் காதல்' மற்றும் 'சத்ரியன்' போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் மற்றும் சசிகுமார் கூட்டணி எப்போது இணையும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 'சுப்ரமணியபுரம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு சசிகுமார், இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரனுடன் இணையவுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சசிகுமார் மற்றும் நந்திதா நடிப்பில் தற்போது 'அசுரவதம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

நாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்