ads

உறுதியானது சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர்

சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்ஜிகே' படத்திலும் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் அரசியல் வாதியாக சமூக போராளியாக சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் அயன், மாற்றான் படங்களை இயக்கிய கேவி ஆனந்த் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சமுத்திரக்கனி, போமன் இராணி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் நாயகியாக சயிஷா சாகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமான பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார். இதன்படி சூர்யாவின் 38வது படத்தை 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். 

உறுதியானது சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர்