ads

2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சூர்யா

தமிழக விவசாயிகளின் நலனுக்காக 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் இணைந்து வழங்கியுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் நலனுக்காக 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் இணைந்து வழங்கியுள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தயாரிப்பில் விவசாயத்தை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஒரு விவசாயியாக கார்த்தியின் வசனங்களும், நடிப்பும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இந்த படத்தில் அக்கா, தம்பியின் சென்டிமென்ட் காட்சிகள் படம் பார்க்க சென்றவர்கள் அனைவரையும் அழ வைத்துவிட்டது. ஏற்கனவே எட்டு வழிச்சாலை போன்ற அரசின் திட்டங்களால் வீடு, நிலங்களை இழந்து தவித்து வரும் விவசாயிகளுக்கு இந்த படத்தின் மூலம் மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது.

இது தவிர இந்த படத்தின் மூலம் விவசாயத்தின் அருமையையும், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையையும் பற்றி மக்களுக்கு சிறப்பான முறையில் இயக்குனர் எடுத்துரைத்துள்ளார்.இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி மற்றும் தமிழக விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தமிழக விவசாயிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாயை சூர்யா வழங்கினார். இது தவிர தொடர்ந்து விவசாய துறையில் சாதனை படைத்து வரும் 5 விவசாயிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சூர்யா