ads

பிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி

நேற்று நடந்த பிக்பாஸில் வைஷ்ணவியை கேவலப்படுத்தி, வெளியேற்றுவதாக கூறி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடந்த பிக்பாஸில் வைஷ்ணவியை கேவலப்படுத்தி, வெளியேற்றுவதாக கூறி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 43வது நாள் ஞாயிற்று கிழமை நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் இருக்கும் போட்டியாளர்களில் மோசமாக விளையாடிய போட்டியாளரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவர். அந்த வகையில் தற்போது மக்கள் அனைவரிடமும் பிக்பாஸ் போட்டியாளர்கள் கெட்ட பெயர் எடுத்து வருகின்றனர்.

இதில் வைஷ்ணவியின் ஜால்றா புத்தியினால் நேற்று வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை வெளியேற்றாமல் போட்டியாளர்களுக்கே தெரியாமல் தனி அறையில் அடைக்கப்பட்டு, இதர போட்டியாளர்கள் வைஷ்ணவி குறித்து கூறும் கருத்துக்களை கேட்கும்படி அமைத்துள்ளனர். இதிலாவது அவருடைய புத்தியை மாற்றிக்கொள்ளுவாரா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தவிர நேற்று சமையல் அறையில் வைஷ்ணவி செய்த புழுப்பர் வீடியோ வெளியீட்டு மக்களிடையே வைஷ்ணவியை கேவலப்படுத்தியுள்ளது.

இந்த விடியோவை பார்த்து சக போட்டியாளர்களும் அவரை கேவலமாக பார்த்தனர். இதன் பிறகு வைஷ்ணவி, மகத், மும்தாஜ் ஆகியோரில் வைஷ்ணவி தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் சனிக்கிழமை நடந்த பிக்பாஸில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவில் இருந்து ஆண்ட்ரியா, கிப்ரான் மற்றும் சத்ய பிரகாஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். இது தவிர விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது டிரைலரும் வெளியிடப்பட்டது. 

பிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி